வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16.07.2025) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வட்டுவாகல் பாலம் முற்றாக மூடப்படும்.
வட்டுவாகல் பாலம் தற்காலிகமாக மூடல் : அனர்த்த முகாமைத்துவ பிரிவு
வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16.07.2025) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வட்டுவாகல் பாலம் முற்றாக மூடப்படும்.
முல்லை வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025 இறுதி நாள் இரவு பூசை நேரலை
முல்லை வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025 இறுதி நாள் மதிய பூசை நேரலையினை இந்த இணைய இணைப்பின் ஊடாகப் பார்வையிட முடியும் என்பதை உலக சப்த கன்னிமார் அடியார்களுக்கு அன்பாக அறியத்தருகின்றோம்.
https://www.youtube.com/watch?v=x8dT2j2qv8I
முல்லை வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வருடாந்த பொங்கல் 2025 ஏழாம் நாள் இரவு பூசை நேரலை
நன்றி.
JJ Live வட்டுவாகல்
https://www.youtube.com/watch?v=dG2pDbUCkwU
Please click Hire
https://www.youtube.com/live/dG2pDbUCkwU
https://www.youtube.com/watch?v=dG2pDbUCkwU
வட்டுவாகல் பிரான்ஸ் உறவுகளின் அனுசரணையுடன் முல்லைக் கடற்கரையில் பட்டத்திருவிழா - படங்கள்
முல்லைத்தீவு கடற்கரையில் 19.01.2025இன்று பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் திருமதி.இராஜயோகினி ஜெயக்குமார், வட்டுவாகல் அறநெறிப்பாடசாலையின் முதல்வர் அப்புத்துரை செல்வரட்ணம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பெருந்திரளான மக்களும் இந்த பட்டத்திருவிழாவில் கலந்து மகிழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் வட்டுவாகல் சப்த கன்னிமார் அற நெறிப் பாடசாலை மாணவி எழிலினிக்கு விருது : படங்கள்
தேசிய ஆக்கத்திறன் போட்டிகளுக்கான விருது வழங்கும் வைபம் நேற்று 21.12.2024 இல் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது எமது வட்டுவாகல் அறநெறிப் பாடசாலை மாணவி செல்வி ''லோகேஸ்வரன் எழிலினி'' அவர்கள் சாதனை புரிந்து சான்றிதழையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
2024 பாதீட்டு நிதியில் முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ சப்த கன்னிமார் அறநெறிக்குத் தளபாடங்கள் அன்பளிப்பு
*
திரு ரவிகரன் எம்.பியின் கோரிக்கை , வட்டுவாகலில் புதிய பாலம் : பிரதிஅமைச்சர் உபாலி உறுதி?
திரு ரவிகரன் எம்.பியின் கோரிக்கை ஏற்று வட்டுவாகல் பாலத்தை பார்வையிட்ட பிரதிஅமைச்சர் உபாலி; புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிப்பு
தேசிய ஆக்கத்திறன் போட்டி , இலக்கிய விழா சாதனைகள் : வட்டுவாகல் அறநெறி மாணவர்கள்
*தேசிய ஆக்கத்திறன் போட்டி*
அல்லைக்கிழங்கு: வட்டுவாகல் மண்ணின் அரிய வகை சுவைமிகு இன்னுமொரு வளம்
இயற்கை அன்னையின் அரவணைப்பில் கம்பீரித்து நிற்கும் எம் கிராமத்தில் வட மாகாணத்தில் கிடைக்கும் சில அரிய ஆரோக்கியமான சுவைமிகு வளங்களும் கிடைக்கின்றன. குறிப்பபாக மட்டி அல்லைக்கிழங்கு நாவல், கரம்பை எனச் சிலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம். அல்லைக்கிழங்கானது 'வற்றாளங் கிழங்கை' ஒத்த ஒரு வகைக் கிழங்கு ஆகும். வற்றாளங் கிழங்கு இனிப்பாக இருக்கும். ஆனால் 'அல்லைக் கிழங்கு' இனிப்பாக இருக்காது. மணற்பாங்கான, வரண்ட உவர்நிலச் சிறுகாடுகளில் படர்ந்து வளர்ந்திருக்கும்.
வட்டுவாகலில் ஆலய பரிபாலன சபையினால் கும்மி அடித்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு
மேற்படி கும்மி அடித்தல் நிகழ்வானது சிறப்பாக நடைபெற ஆலய பரிபாலன சபையால்
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடற்படையின் காணி அளவீட்டு முயற்சி: வட்டுவாகல் மக்களின் எதிர்ப்பால் இடை நிறுத்தம்!
முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ்மக்களுக்குரிய 617ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்கும் நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சி 07.06.2022 இன்று காணிகளுக்குரிய பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
5பில்லியன் ரூபாய்கள் செலவில் வட்டுவாகல் பாலம் விரைவில் நிர்மாணிப்பு: பா உ திரு சுரேன்ராகவன்
அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் வடமாகாண ஆளுனரும்,தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான திரு சுரேன்ராகவன் இதனைத் தெரிவித்தார்.புதிய பாலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பலராலும் வேண்டுகோள் விடுத்த நிலையில் இந்தச் செய்தி பாராட்டப்பட வேண்டியதாகும்.
பழைய பாலம் நினைவுச் சின்னமாக அப்படியே இருக்க,அதற்கு மேலாக புதியபாலம் நிர்ணயிக்கப்படும்.இது விண்ணப்பித்தவர்களின் விருப்பமும் கூட. ஏற்கனவே இதற்குரிய வரைபடத்தை உருவாக்கி மதிப்பீடு செய்யப்பட்டு
மூன்று பில்லியன் ரூபாய் செலவாகும் ,என கணக்கிடப்பட்டது.3 வருடத்தில் இதன் கட்டுமானம் நிறைவு பெறும் எனவும் திட்டமிடப்பட்டது.கொரணா இடையூறு காரணமாக இத்திட்டம் தள்ளிப்போனது. இன்றைய நிலையில் புதிய மதிப்பீடு செய்வது அவசியமாகும்.ஏறக்குறைய 5பில்லியன் ரூபாய் செலவாகலாம்.இந்தப் பாலத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் . என பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேன்ராகவன் மேலும் தெரிவித்தார்.
நன்றி.ஐ பி சி தமிழ் செய்திப்பிரிவு.
அடங்காத் தமிழன் காலஞ்சென்ற திரு சுந்தரலிங்கம் அவர்கள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1951ம் ஆண்டு இந்த வட்டுவாகல் பாலம் கட்டப்பட்டது.
எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில் இப்பாலம் சிதைவடைந்து காணப்படுகிறது.பலமான ஆற்றுப் பாய்ச்சல் ,இயற்கை அனர்த்தங்களாக அப்பப்ப ஏற்படும் வெள்ளப் பெருக்குகள்.சுனாமியின் தாக்கம்.நடந்து முடிந்த யுத்தம் என்று.இந்தப்பாலத்தை உருக்குலைத்திருந்தன.
புதிய பாலத்தை அமைக்க வேண்டு மென்று
வட்டுவாகல் மக்களுடன்,பிரயாணம் செய்பவர்களும் இதற்கான குரல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நானும் எனது பங்கிற்கு முன்பு முகநூலில் இரண்டு கட்டுரைகளைப் பதிவு செய்திருந்தேன்.அதுமாத்திரமன்றி சம்பந்தப் பட்ட பலருக்கும் வேண்டுகோளாக விடுத்திருந்தேன்.
இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.கிடப்பில் போடாமல் விரைவில் இதன்கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பதில் வட்டுவாகலைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்றவன் என்ற ரீதியில் ஆர்வமாக இருக்கிறேன்.
நன்றி.
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
இந்த விடயம் தொடர்பில் திரு கணேசமூர்த்தி 05.01. 2020 இல் எழுதிய கட்டுரையின் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது
https://www.vadduvakal.com/2020/01/blog-post.html
கிழக்கு மாகாண ''விளாவூர் யுத்தத்தில்'' போராடி இரண்டாமிடம் பெற்ற உதயசூரியன் அணி : படங்கள்
வெளி மாவட்ட உதைபந்தாட்டப் போட்டித்தொடரின் முதல் போட்டியில் உதயசூரியன் வெற்றி
புதிதாக கட்டப்பட்ட வட்டுவாகல் நாக கன்னிகளிற்கு நாளை கும்பாபிசேகம்
பல தசாப்தங்களின் பின் பொங்கலுற்ற வட்டுவாகல் இடிந்த பிள்ளையார் / கேணியடிப் பிள்ளையார்
வட்டுவாகலில் உள்ள மிகப்பழைய பிள்ளையார் கோயில் புனருத்தானம் பெற்று இன்று எழிமையாகப் பொங்கல் கண்டிருக்கின்றது.
வட்டுவாகல் மக்களின் போராட்டத்தால் மழுங்கிய துப்பாக்கி முனை: கைவிடப்பட்ட காணி அபகரிப்பு
இனிதே நிறைவுற்ற சப்தகன்னிமார் ஆலய மகா கும்பாபிஷேகம்: (படங்கள்)
இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்ட வணக்கத்திற்குரிய பிரதான பல குருக்கள்மாரின் பங்களிப்புடன் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு இனிதே நிறைவு பெற்று தற்பொழுது ஏனைய அபிஷேக பூஜைகள், மண்டலாபிசேக பூஜைகள் இடம்பெற்று வருகின்றது.
வட்டுவாகலில் குண்டுவெடிப்பு: இளைஞன் பலி மற்றொருவர் படுகாயம்.
மேலதிக விபரங்கள் தரவேற்றப்படும்.
வட்டுவாகலில் வயோதிபர்களின் நலன் பேண உதயமாகின்றது ''நாகேஸ்வரி அறக்கட்டளை'':சிறந்த பணி
பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் திரு நடராசமூர்த்தி பிரபாகரன் அவர்களினால் வயோதிபர்களின் நலன் பேணுவதற்கான ''நாகேஸ்வரி அறக்கட்டளை'' வட்டுவாகலில் 05.04.2021 இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
அவரது இச் சிறந்த பணி தொடர எமது கிராமத்தின் சார்பாக நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .
நாகேஸ்வரி அறக்கட்டளை சிறப்பாகத் தனது பணியை ஆரம்பித்துச் செயற்படட்டும்.