காலம் : 25-01-2026
நேரம் : மதியம் 2.00 மணி
வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள், வட்டுவாகல் மக்கள்
வட்டுவாகல்.கொம்: செய்திகள்
வடக்கு மாகாண சுற்றுலா திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண சுற்றுலா விருது விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளை வழங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அந்த வகையில், எமது கிராமத்தைச் சேர்ந்த அ. இராமகிருஷ்ணன் (கிபிர்) அவர்கள்,
“சிறந்த உணவு விருது (Best Food Award)” என்ற உயரிய விருதினை
கிபிர் கேட்டரிங் – முல்லைத்தீவு சார்பில் பெற்றுக் கொண்டது எமக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
உணவுத் துறையில் தரம், சுவை மற்றும் சிறப்பான சேவையை வழங்கி வந்ததற்கான அங்கீகாரமாக இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தனிப்பட்ட அவருடைய முயற்சிக்கும், அதேவேளை எமது கிராமத்திற்கும் கிடைத்த பெருமை ஆகும்.
இந்த சாதனையின் மூலம் இளம் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழும்
அ. இராமகிருஷ்ணன் (கிபிர்) அவர்களை
நன்றி.
JJ Live வட்டுவாகல்
https://www.youtube.com/watch?v=dG2pDbUCkwU
Please click Hire
https://www.youtube.com/live/dG2pDbUCkwU
https://www.youtube.com/watch?v=dG2pDbUCkwU
முல்லைத்தீவு கடற்கரையில் 19.01.2025இன்று பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
தேசிய ஆக்கத்திறன் போட்டிகளுக்கான விருது வழங்கும் வைபம் நேற்று 21.12.2024 இல் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது எமது வட்டுவாகல் அறநெறிப் பாடசாலை மாணவி செல்வி ''லோகேஸ்வரன் எழிலினி'' அவர்கள் சாதனை புரிந்து சான்றிதழையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
*
திரு ரவிகரன் எம்.பியின் கோரிக்கை ஏற்று வட்டுவாகல் பாலத்தை பார்வையிட்ட பிரதிஅமைச்சர் உபாலி; புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிப்பு
*தேசிய ஆக்கத்திறன் போட்டி*
மேற்படி கும்மி அடித்தல் நிகழ்வானது சிறப்பாக நடைபெற ஆலய பரிபாலன சபையால்
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் வடமாகாண ஆளுனரும்,தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான திரு சுரேன்ராகவன் இதனைத் தெரிவித்தார்.புதிய பாலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பலராலும் வேண்டுகோள் விடுத்த நிலையில் இந்தச் செய்தி பாராட்டப்பட வேண்டியதாகும்.
பழைய பாலம் நினைவுச் சின்னமாக அப்படியே இருக்க,அதற்கு மேலாக புதியபாலம் நிர்ணயிக்கப்படும்.இது விண்ணப்பித்தவர்களின் விருப்பமும் கூட. ஏற்கனவே இதற்குரிய வரைபடத்தை உருவாக்கி மதிப்பீடு செய்யப்பட்டு
மூன்று பில்லியன் ரூபாய் செலவாகும் ,என கணக்கிடப்பட்டது.3 வருடத்தில் இதன் கட்டுமானம் நிறைவு பெறும் எனவும் திட்டமிடப்பட்டது.கொரணா இடையூறு காரணமாக இத்திட்டம் தள்ளிப்போனது. இன்றைய நிலையில் புதிய மதிப்பீடு செய்வது அவசியமாகும்.ஏறக்குறைய 5பில்லியன் ரூபாய் செலவாகலாம்.இந்தப் பாலத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் . என பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேன்ராகவன் மேலும் தெரிவித்தார்.
நன்றி.ஐ பி சி தமிழ் செய்திப்பிரிவு.
அடங்காத் தமிழன் காலஞ்சென்ற திரு சுந்தரலிங்கம் அவர்கள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1951ம் ஆண்டு இந்த வட்டுவாகல் பாலம் கட்டப்பட்டது.
எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில் இப்பாலம் சிதைவடைந்து காணப்படுகிறது.பலமான ஆற்றுப் பாய்ச்சல் ,இயற்கை அனர்த்தங்களாக அப்பப்ப ஏற்படும் வெள்ளப் பெருக்குகள்.சுனாமியின் தாக்கம்.நடந்து முடிந்த யுத்தம் என்று.இந்தப்பாலத்தை உருக்குலைத்திருந்தன.
புதிய பாலத்தை அமைக்க வேண்டு மென்று
வட்டுவாகல் மக்களுடன்,பிரயாணம் செய்பவர்களும் இதற்கான குரல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நானும் எனது பங்கிற்கு முன்பு முகநூலில் இரண்டு கட்டுரைகளைப் பதிவு செய்திருந்தேன்.அதுமாத்திரமன்றி சம்பந்தப் பட்ட பலருக்கும் வேண்டுகோளாக விடுத்திருந்தேன்.
இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.கிடப்பில் போடாமல் விரைவில் இதன்கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பதில் வட்டுவாகலைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்றவன் என்ற ரீதியில் ஆர்வமாக இருக்கிறேன்.
நன்றி.
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
இந்த விடயம் தொடர்பில் திரு கணேசமூர்த்தி 05.01. 2020 இல் எழுதிய கட்டுரையின் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது
https://www.vadduvakal.com/2020/01/blog-post.html
https://t.co/432wrPgSMF
— vadduvakal (@VadduvakalCom) August 8, 2016
இராஜ கோபுர அத்திவார அகழ்வின்போது அகப்பட்ட மிகப்புராதனத் தொல்பொருட் தடயம் (படங்கள் இணைப்பு)