மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிணத்திற்கான உதைபந்தாட்டப் போடிட்கள் செம்மலை விளையாட்டுக்
வட்டுவாகல்.கொம்
09.04.2022 நாளை "மண்ணின் மைந்தர்கள்" மாபெரும் வெற்றிக்கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழக மானது அளம்பில் இளந்தென்றலுடன் புதிய சீருடையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டினை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளார்கள்.
இவ் விபத்து சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த கிளிநொச்சியினை சேர்ந்த இளைஞனின் உடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று (21) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது காயமடைந்தவர்கள் சிலர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ஏட்டிக்கு போட்டியாக பேருந்தினை ஓட்டிவந்தமையாலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக காயமடைந்த மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
விபத்துக்குள்ளான பேருந்தினை முல்லைத்தீவு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார்கள்.
அத்துடன், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட சாரதி மருத்துவ சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
மேலும் சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவிலிருந்து வருகை தந்த திரு முகுந்தன் திலக்சி ஆகியோர்களினால் இன்று மு/வெட்டுவாய்க்கால் பாடசாலைக்கு பாடசாலை உபகரணப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இன்றைய தினம் எமது உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் எதிர்கால இளைய தலைமுறைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 12 - 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான 14 சோடி உதைபந்தாட்டக் காலணிகள் ""வட்டுவாகல் பிரான்ஸ் ஒன்றியத்தின்"" நிதி அனுசரனையுடன் கழகம் சார்பாக மைதானத்தில் வழங்கப்பட்டது.
அதிக மழையினால் சடுதியாக நீர்மட்டம் அதிகரித்ததனாலேயே ஆறு தானாக உடைப்பெடுத்து பாய்கின்றது.
மேலதிக விபரங்கள் , படங்கள் தரவேற்றப்படும்
அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் வடமாகாண ஆளுனரும்,தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான திரு சுரேன்ராகவன் இதனைத் தெரிவித்தார்.புதிய பாலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பலராலும் வேண்டுகோள் விடுத்த நிலையில் இந்தச் செய்தி பாராட்டப்பட வேண்டியதாகும்.
பழைய பாலம் நினைவுச் சின்னமாக அப்படியே இருக்க,அதற்கு மேலாக புதியபாலம் நிர்ணயிக்கப்படும்.இது விண்ணப்பித்தவர்களின் விருப்பமும் கூட. ஏற்கனவே இதற்குரிய வரைபடத்தை உருவாக்கி மதிப்பீடு செய்யப்பட்டு
மூன்று பில்லியன் ரூபாய் செலவாகும் ,என கணக்கிடப்பட்டது.3 வருடத்தில் இதன் கட்டுமானம் நிறைவு பெறும் எனவும் திட்டமிடப்பட்டது.கொரணா இடையூறு காரணமாக இத்திட்டம் தள்ளிப்போனது. இன்றைய நிலையில் புதிய மதிப்பீடு செய்வது அவசியமாகும்.ஏறக்குறைய 5பில்லியன் ரூபாய் செலவாகலாம்.இந்தப் பாலத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் . என பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேன்ராகவன் மேலும் தெரிவித்தார்.
நன்றி.ஐ பி சி தமிழ் செய்திப்பிரிவு.
அடங்காத் தமிழன் காலஞ்சென்ற திரு சுந்தரலிங்கம் அவர்கள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1951ம் ஆண்டு இந்த வட்டுவாகல் பாலம் கட்டப்பட்டது.
எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில் இப்பாலம் சிதைவடைந்து காணப்படுகிறது.பலமான ஆற்றுப் பாய்ச்சல் ,இயற்கை அனர்த்தங்களாக அப்பப்ப ஏற்படும் வெள்ளப் பெருக்குகள்.சுனாமியின் தாக்கம்.நடந்து முடிந்த யுத்தம் என்று.இந்தப்பாலத்தை உருக்குலைத்திருந்தன.
புதிய பாலத்தை அமைக்க வேண்டு மென்று
வட்டுவாகல் மக்களுடன்,பிரயாணம் செய்பவர்களும் இதற்கான குரல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நானும் எனது பங்கிற்கு முன்பு முகநூலில் இரண்டு கட்டுரைகளைப் பதிவு செய்திருந்தேன்.அதுமாத்திரமன்றி சம்பந்தப் பட்ட பலருக்கும் வேண்டுகோளாக விடுத்திருந்தேன்.
இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.கிடப்பில் போடாமல் விரைவில் இதன்கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பதில் வட்டுவாகலைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்றவன் என்ற ரீதியில் ஆர்வமாக இருக்கிறேன்.
நன்றி.
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
இந்த விடயம் தொடர்பில் திரு கணேசமூர்த்தி 05.01. 2020 இல் எழுதிய கட்டுரையின் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது
https://www.vadduvakal.com/2020/01/blog-post.html
வட்டுவாகலில் அமைந்துள்ள நாக கன்னிகள் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு கடந்த இரு நாட்களாக கும்பாபிசேகம் நடைபெற்று வருகின்றது.
வட்டுவாகலில் உள்ள மிகப்பழைய பிள்ளையார் கோயில் புனருத்தானம் பெற்று இன்று எழிமையாகப் பொங்கல் கண்டிருக்கின்றது.
எம் தாய் நிலத்தில் ஏற்பட்டுள்ள இன்றைய நிலை நாம் அறிந்ததே. கொரொனாவின் தாக்கத்தால் அதன் மருத்துவ தேவைகளை நிவர்த்திக்க முடியாது வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட பல உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. எம் தாய்நிலமும் இதற்கு விதிவிலக்கல்ல.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பொலீஸ் பிரிவினை கொண்ட இரண்டு பிரதேச செயலகங்கள் கடந்த 17.05.21 நள்ளிரவு தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமை நாம் அறிந்ததே.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இராணுவம் , பொலிஸ் ஆகியோரின் தடைகளுக்குமத்தியிலும் வட்டுவாகல் நற்பணி மன்றத்தினால் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு எமது கிராம மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மகத்தான பணியில் புலம்பெயர் வாழ் உறவுகளுடைய பங்களிப்புடன் எமது கிராமத்தின் இளைஞர்களினால் சிறப்புடன் நிறைவேற்றப்பட்டது. சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு இப்பணியை நிறைவேற்றிய வட்டுவாகல் நற்பணி மன்றத்துக்கும் , பொறுப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை கிராம மக்கள் சார்பாகத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிகள்.
இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்ட வணக்கத்திற்குரிய பிரதான பல குருக்கள்மாரின் பங்களிப்புடன் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு இனிதே நிறைவு பெற்று தற்பொழுது ஏனைய அபிஷேக பூஜைகள், மண்டலாபிசேக பூஜைகள் இடம்பெற்று வருகின்றது.
மேலதிக விபரங்கள் தரவேற்றப்படும்.
பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் திரு நடராசமூர்த்தி பிரபாகரன் அவர்களினால் வயோதிபர்களின் நலன் பேணுவதற்கான ''நாகேஸ்வரி அறக்கட்டளை'' வட்டுவாகலில் 05.04.2021 இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
அவரது இச் சிறந்த பணி தொடர எமது கிராமத்தின் சார்பாக நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .
நாகேஸ்வரி அறக்கட்டளை சிறப்பாகத் தனது பணியை ஆரம்பித்துச் செயற்படட்டும்.
வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் அண்ணா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் இன்று (04.04.2021)மோதியது. வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. முடிவைத் தீர்மானிக்கும் தண்ட உதை முடிவில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டு கழகம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வட்டுவாகலில் நற்பணி மன்றமானது உருவாக்கப்பட்டு இன்று தமது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தாயகத்திலுள்ள , புலம்பெயர்ந்து வாழும் வட்டுவாகல் உறவுகள் ஒன்றித்து இச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டமை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. தாயகத்தில் ஏற்படுத்தப்பட்ட சிறந்த நிர்வாகத்தினருடன் , புலம்பெயர்ந்து வாழும் அனைத்து வட்டுவாகல் உறவுகளும் ஒன்றாகப் பயணித்து இவ் நற்பணி மன்றத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் மேலும் வலுச்சேர்ப்பதாக அமைகின்றது.
எமது கிராமத்தின், கிராம மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத்தேவைகள் முதற்கட்டமாகத் தீர்க்கப்படவுள்ளது. அரசாங்கத்தினரின் செயற்பாடுகளை, அதன் உதவியை மட்டும் எதிர்பாராமல் தாயகத்திலும் , புலம்பெயர்தேசங்களிலும் வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் இச் செயற்பாடுகள் மேன்மேலும் விரிந்து செல்லவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் தேவையாகவும் அமைகின்றது.
இச் செயற்பாடுகளில் தாயகத்திலோ அல்லது புலம்பெயர் தேசங்களிலோ எம்முறவுகள் இணைய விரும்பினால் தயவுசெய்து கீழ் உள்ள பொறுப்பானவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.
இணைப்பாளர் - திரு குணநேசன் (ஆசிரியர்) 0094 77 603 3938
தலைவர் - திரு செந்தூர்ச்செல்வன் 0094 75 610 4330
''ஒற்றுமையே எமது பலம்''
அருள் மிகு வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தில் புனருத்தானப் பணிகள் ஆலய நிர்வாகத்தினரின் மேற்பார்வையில் இடையறாது நடைபெற்று வருகின்றது. பாலஸ்தானம் மேற்கொள்ளப்பட்டு ஆலயத்திற்கான புதிய கட்டடப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் வட்டுவாகல் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி முகக்கவசங்களை வழங்கி உதவிய பிரான்ஸ் ஒன்றிய உறுப்பினர்களுக்கும், பாடசாலையின் ஒரு பகுதி வேலியை சிரமதான அடிப்படையில் அமைத்துக் கொடுக்கும் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
https://t.co/432wrPgSMF
— vadduvakal (@VadduvakalCom) August 8, 2016
இராஜ கோபுர அத்திவார அகழ்வின்போது அகப்பட்ட மிகப்புராதனத் தொல்பொருட் தடயம் (படங்கள் இணைப்பு)